ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினது தூதுவர்கள் குழுவொன்று நேற்று (10) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினை சந்தித்துள்ளது.
GSP+, IMF மற்றும் மனித உரிமைகள் பேரவை தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு அவர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.
இதனை வெற்றியடையச் செய்வதற்கு அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புவதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு எதிர்நோக்கும் சவாலான காலங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஆதரவை வழங்கும் என ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கு மனித உரிமைகள், சுதந்திரமான கருத்துரிமை மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினர்கள்.