2022 டிசம்பரில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான 80% வருகையைப் பரிசீலிப்பதில்லை என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
உயர்தர மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தை மேலும் நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2019/2020 க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை 19.08.2022 வரை நீடிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.