மணியார்டர் மூலம் தபால் நிலையங்கள் மூலம் செலுத்தக்கூடிய அதிகபட்ச தொகை 50,000 ரூபாயில் இருந்து 100,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் சந்தை போட்டித்தன்மையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்ளுர் தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி சாதாரண அல்லது வியாபார கடிதத்தின் தபால் கட்டணம் 15 ரூபாவில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட கடிதத்தின் தபால் கட்டணம் ரூ.30ல் இருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.