ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெரா விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
விமான நிலையத்தில் பயணிகளை பரிசோதிக்கும் இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சந்தேகநபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து பயணிகள் அச்சத்தில் தப்பிச் சென்றதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேநேரம் பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்ததுடன், அவரிடமிருந்த துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சந்தேகநபர் எதன் அடிப்படையில் இந்த தாக்குதலை மேற்கொண்டார் என்பது இதுவரை வெளியாகவில்லை. சந்தேகநபர் சுமார் 05 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும், விமான நிலையத்தின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலின் பின்னர், கன்பரா விமான நிலையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டிருந்த போதிலும், விமான நிலையத்தின் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. கான்பரா விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.