வழமை போன்று பேருந்துகள் மூலம் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு பதிலாக முன்பணம் செலுத்திய அட்டை மூலம் பணம் செலுத்தி பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அதனடிப்படையில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில், மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்திலிருந்து காலி வரை நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகள் போக்குவரத்து பேரூந்துகளின் முன்னோடி திட்டமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
சாதாரண டெபிட் கார்டு போன்று செயல்படும் இந்த கார்ட், முன்பணம் செலுத்தும் முறையில் பயணிகளுக்கு தேவையான பணத்தை டெபாசிட் செய்து அதன் மூலம் பயணம் தொடர்பான பணத்தை செலுத்த அனுமதிக்கின்றது. மிகவும் பாதுகாப்பான பணம் செலுத்தும் முறையாக, இந்த அட்டையானது தற்போது உள்ளுர் அரச வங்கியான மக்கள் வங்கியின் ஊடாக கிடைக்கப்பெறுவதுடன், தற்போதுள்ள அட்டைகளுக்கும் இந்த பணம் செலுத்தும் வசதி உள்ளது.
இன்று ஆரம்பிக்கப்பட்ட முன்னோடித் திட்டத்தில் கண்டறியப்பட்ட பிழைகள் மற்றும் சிக்கல்களைக் கொண்டு, எதிர்காலத்தில் அனைத்து பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கும், ரயிலில் பயணம் செய்வதற்கும் இந்த முன்பண அட்டை முறையைப் பயன்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.