முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹானிலுள்ள இல்லத்திற்கு முன்பாக கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது சட்டத்தரணிகள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இன்று கருத்து வெளியிட்டார்.
சட்டத்தரணிகளின் நடத்தை காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மனம் தளர்ந்து போயுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஊடக அறிக்கையிடல் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.