பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடைய பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் விவசாய திணைக்களம் (USDA), சேவ் தி சில்ட்ரன் இணைந்து, இலங்கைக்கு 320 மெட்ரிக் தொன் கொண்டைக்கடலையை வழங்கியுள்ளது.
இலங்கை முழுவதிலும் உள்ள பாடசாலை மாணவர்களின் போஷாக்கை கருத்திற்கொண்டு இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு 3,000 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்களை வழங்க எதிர்பார்த்துள்ளனர், அதன் ஒரு கட்டமாகவே இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே.சுங், கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பாடசாலை மாணவர்களின் கல்வியில் அதிக கவனம் செலுத்தி அவர்களின் பசியை போக்க அமெரிக்க மக்கள் இந்த நன்கொடையை அளித்ததாக அமெரிக்க தூதர் ஜூலி சுங் தெரிவித்தார்.