பாதாள உலகத்தை சேர்ந்த குற்றவாளிகளை ஒடுக்கும் விசேட நடவடிக்கையொன்று நாளை (27) திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தலைமையில் இன்று (26) இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
மேற்கு மற்றும் தெற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பயங்கரவாத விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப் படை, பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஏனைய புலனாய்வுத் திணைக்களங்கள் இந்தக் கலந்துரையாடலின்போது கலந்துகொண்டிருந்தன.