சவூதி அரேபியாவின் பிரதிப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எழுத்துமூலம் அனுப்பியுள்ளதாக சவூதி ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த கடிதப் பரிமாற்றத்தின் நோக்கம் என்று கூறப்படுகின்றது.
இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லாவின் சார்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் வலீத் பின் அப்துல்கரீம் அல் குரைஜி மற்றும் இலங்கை ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர்களது சந்திப்பில் சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் அவற்றை பல்வேறு துறைகளில் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மேலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.