2021 (2022) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர விடைத்தாள்களின் மதிப்பீட்டிற்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்துள்ளார்.
அதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்ளும் விசாரணைக் குழுவுக்கு, ஒரு விடைத்தாளுக்கு செலுத்தப்படும் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு, பரீட்சை நிலைய ஊழியர்கள் மற்றும் பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்படுகின்ற நாளாந்த செலவுகளை மீளாய்வு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
10.06.2022 அன்று அமைச்சர் மற்றும் தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பணிப்புரை வழங்கியதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.