துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஜப்பானில், “டைஸ்” நிறுவனத்திடம் லஞ்சம் கேட்டதாக சமூக ஊடகங்கள் உள்ளிட்ட மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த அனுமதிக்கும் வகையில் அவர் தனது அமைச்சர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.
இதன்படி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி திருமதி குசலசரோஜனி வீரவர்தன தலைமையில் மூவரடங்கிய விசாரணைக் குழுவை ஜனாதிபதி ஜூலை 22ஆம் திகதி நியமித்து, அதன் இறுதி அறிக்கை ஜூலை 31ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
குழுவின் அறிக்கையின்படி நிமல் சிறிபால டி சில்வா அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.