முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வந்ததன் பின்னர் வாழ்வதற்கான நல்ல சூழலை உருவாக்கித் தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (12) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளார்.
பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஜூலை 13ஆம் திகதி மாலைதீவுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூர் சென்ற பின்னர் நேற்று தாய்லாந்தின் பாங்காக் நகரை சென்றடைந்துள்ளார்.
மேலும்,தெரியவருவதாவது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ நாட்டை வந்தடைந்தால் அவருக்கான பாதுகாப்பினை மனித உரிமைகள் ஆணைக்குழு தெருவதோடு தற்போதைய ஜனாதிபதிக்கும் போராட்டக்காரர்களுக்கும் தொடர்புள்ளதா என்பதினையும் பரிசீலிக்குமாறு குறித்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.