சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் (13) சனிக்கிழமை யூத் அலையன்ஸ் ஶ்ரீ-லங்கா அமைப்பினால் இவ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில்பிரதான வளவாளராகவும் இவ் நிகழ்சித் திட்டத்தினுடைய பிராதானியாவும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய பொறியியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகிய கலாநிதி பொறியியலாளர் எம்.ஏ சஜா கலந்து கொண்டதுடார் மேலும் இவ் அமைப்பின் தலைவர் இஷட்.எம் ஸாஜீத், செயலாளாராகிய சரோத் சுஜா மற்றும் அமைப்பினுடைய நிர்வாக உறுப்பினர்களினுடைய வழிகாட்டலில் நடை பெற்றது.
இவ் நிகழ்சியில் பிரதம அதிதியாக இலங்கை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினுடைய கெளரவ உறுப்பினரும் முன்னால் சட்டம் ஒழுங்கு அமைச்சினுடைய மேலதீக செயலாளாருமாகிய ஏ.எல்.எம் சலீம் கலந்து கொண்டதோடு விஷேட அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினுடைய பிரதேச செயலாளர் எம்.எம் ஆஸீக் கலந்து கொண்டார் மேலும் கௌரவ அதிதிகளாக முன்னால் கொழும்பு பல்கலைக்கழகத்தினுடைய சிரேஷ்ட விரிவுரையாளரான எம்.ஐ.எம் சதாத் மற்றும் சிரேஷ்ட தொலைக்காட்சி மற்றும் வானொலி அறிவிப்பாளரும் அறம் தொலைக்காட்சியினுடைய பிரதான தலைமை அதிகாரியுமான எஸ்.டி ரொசன் அஷ்ரப், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கா நாட்டுக்கான தூதரகத்தினுடைய உத்தியோகத்தர் நௌஷாட் ஏ ஜப்பார்மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பொறுப்பாளரான எம். எஸ். எப். ஸாமிர் மற்றும் புத்தாக்க சிந்தனை தொடர்பான வளவாளர்களாக கலந்து கொண்டிருந்த இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய பொறியியல்பீட சிரேஷ்ட விரிவுரையாளராகிய கலாநிதி பொறியியலாளர் எம். என். ஏ. ஹினாஸ், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய பொறியியல்பீட விரிவுரையாளர் பொறியியலாளர் என். டி. எம். சாஜித் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்சியில் பங்குபற்றிய இளைஞர் யுவதிகளுக்கு விரிவுரைகளை வழங்கியிருந்தனர்.
குறித்த பயிற்சிப் பட்டறையில் பல் வேறு பிரதேசத்தினைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்ததுடன் இறுதியில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.