சர்வகட்சி வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என சமகி ஜனபலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், தற்போது சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்கான விவாதங்கள் பயனற்றவை என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான சூழல் நாட்டில் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய பாராளுமன்ற உறுப்பினர் அனுபா பாஸ்குவல் இதனைத் தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனைத்து தரப்பினரும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.