பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகளைத் தளர்த்தி, அதற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உண்மைகளை விளக்கியதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதனால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாதகமான சூழ்நிலை உருவாகுமா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.