பயிர் சேதத்தை ஏற்படுத்தினாலும் காட்டு யானையை பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட விலங்கு பிரிவில் இருந்து காட்டு யானை நீக்கப்பட்டால், காட்டு யானைகள் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாத்துறை மூலம் நாட்டுக்கு அதிக வருமானம் கிடைப்பதால் காட்டு யானையை தேசிய வளமாக பாதுகாக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை குறைப்பதற்கான விடயங்களை ஆராய சமீபத்தில் குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது.
அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளாக தாதுலேனா,காட்டுப்பன்றி, மயில், குரங்கு மற்றும் காட்டு யானை.என்பன அடங்குகின்றன எனினும், காட்டு யானை பாதுகாக்கப்பட்ட விலங்கு வகையைச் சேர்ந்தது என்பதால், பயிர் சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டு யானையை நீக்க சம்பந்தப்பட்ட குழு முடிவு செய்துள்ளது. எனினும், இந்தப் பட்டியலில் இருந்து தேசிய விலங்கான தாதுலேனா நீக்கப்படவில்லை.