ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நாளை (29) நடைபெற உள்ளது.
இச்சந்திப்பானது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாளை மாலை 5.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன .
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து மாவட்டத் தலைவர்கள் நாளை முதல் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.