
எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்காவிட்டால் நாடு பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கான ஆதரவை வழங்குவது தொடர்பான வேலைத்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் சொசைட்டி உட்பட இலங்கையின் பிரதான கடன் வழங்குனர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெறுவதிலும் தீர்க்கமான கொள்கை நடவடிக்கைகளை எடுப்பதிலும் இலங்கை அதிகாரிகள் அடைந்துள்ள முன்னேற்றம் பாராட்டுக்குரியது என அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோஜிவா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் உடன்படிக்கையை எட்ட முடியும் என அரசாங்கம் உறுதியாக நம்புவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.