இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போதிலும், நாட்டின் வங்கி முறைமைகள் ஸ்திரத்தன்மையுடன் இருந்ததாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், நவீன வர்த்தக உலகில் வங்கித்துறை மிகவும் சவாலான செயற்பாடுகளில் ஒன்றாகும். அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல நாடுகளின் வங்கி அமைப்புகள் எதிர்கொள்ளும் சவால்கள் தற்போது பதிவாகி வருகின் நிலையில் இதனையடுத்து இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகள் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு. இலங்கை கடந்த காலங்களில் பல சிரமங்களை எதிர்கொண்ட போதும், குறித்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டின் வங்கி முறைமை ஸ்திரத்தன்மையை பேண முடிந்தது எனவும் எதிர்காலத்தில் வங்கி முறைமையில் இவ்வாறான ஸ்திரத்தன்மையை பேண முடியும் என நம்புவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.