இலங்கையில் திருடன் ஒருவன் அனுப்பிய கடிதம் குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர்.
இதன்படி, கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில் பயணி ஒருவர் தனது பணப்பையினை இழந்துள்ளார்.
இந்நிலையில் பணப்பையை இழந்த நபருக்கு குறித்த திருடனிடமிருந்து கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
மேலும், குறித்தக் கடிதத்தில் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளதோடு அதில் குறிப்பு ஒன்றும் எழுதி அனுப்பப்பட்டுள்ளது
அந்த குறிப்பில் ,
“உங்களை கடவுள் ஆசி வழங்கியுள்ளார். எனக்கு ஒரு பணத்தேவை இருந்தது. அதனால்தான் பணத்தை எடுத்தேன். இல்லை என்றால் பணத்தையும் திருப்பி அனுப்பியிருப்பேன். இந்த நேரத்தில் அது பெரிய உதவியாக இருந்தது.
அத்துடன், உங்கள் பணப்பை மிகவும் பழையதாக இருந்தது. புதிதாக ஒன்று வேங்குங்கள். இல்லை என்றால் இந்த கடிதத்துடன் அதனையும் அனுப்பி வைத்திருப்பேன். நீங்கள் ஒரு தானம் செய்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி” என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, திருடனிடமிருந்து கிடைத்த கடிதம் மற்றும் தனது ஆவணங்களை குறித்த பணப்பையின் உரிமையாளர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.