கிராம்பு என்பது ஓரு பூவின் மொட்டு ஆகும். இது ஓரு மருத்துவ மூலிகையாகவும் ,மருந்து பொருளாகவும் சமையலில் நறுமனப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரமாகும்.
இந்தோனேசியாவில் பெரும்பான்மையாகப் பயிரிடப்பட்டாலும் இந்நியாவிலும் இலங்கையிலும் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
இது கிராம்பு, இலவங்கம் அங்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு , சோசம், திரளி, வராங்கம் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்ந மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றில் இருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
இதில் கார்போஹைட்ரேட், ஈரப்பதம், புரதம் இகொழுப்பு, நார்ப்பொருள்; , மினரல் இஹைட்ரோ குளோரிக், கல்சியம், தயமின், விட்டமின் ஏ மற்றும் சி போன்றவை உள்ளன.
கிராம்பு நோய் நிவாரணியாகவும் காணப்படுகின்றது. பல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலுக்கு மிகச் சிறந்த நிவாரணியும் ஆகும்.
உடலின் சூட்டை சமநிலைப்படுத்தவும் இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது.
இதனால் ஜீரணக் கோளாறுகள் நீங்குகின்றன. இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் தான் அதிகம்; எதிர்ப்பு சக்தியை கொடுப்பவை உங்கள் உடலை நோய்க் கிருமிகளிலிருந்து பாதுகாப்பது இவர்களுடைய முக்கிய வேலையாகும் இது நமக்கு நிறைய நன்மைகளை அளிக்கின்றது,எனவே கிராம்பை உணவில் சேர்த்துக் கொண்டால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அழற்சி கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்கின்றது.
ஆக்கம்: சுமையா சுகூர்