15 வயதுடைய பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய ஒரு பிள்ளையின் தந்தை கடந்த 21 ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நாவலப்பிட்டி டோலஸ்பாகே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரது மனைவி பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேம்பியன் தோட்டத்தின் கீழ் பகுதியில் வசிப்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலை மாணவி தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும், அவரது நடத்தையில் சந்தேகமடைந்த குடும்ப சுகாதார வைத்திய அதிகாரி, பாடசாலை மாணவியை பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்து அவர் ஆறு மாத கர்ப்பிணி என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.