எரிபொருள் நெருக்கடியினால் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற் கொண்டு இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத திணைக்களம் எதிர்காலத்தில் தமது சேவைகளை மேலும் விஸ்தரிப்பதற்கு தீர்மானித்துள்ளன.
இது தொடர்பில் இந்திய கடனுதவியின் கீழ் 500 பஸ்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
புகையிரதங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது கடினமாக இருந்தாலும் புகையிரத பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் ரஞ்சித் பத்மலால் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ஒளிபரப்பான சிங்கள வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளனர்.