எதிர்வரும் வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி பொது விடுமுறை என்பதால் புதன்கிழமை பாடசாலைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ஆகஸ்ட் 8ஆம் திகதி முதல் வடக்கிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் ஐந்து நாட்களிலும் நடத்த தீர்மானித்துள்ளன.
இது தொடர்பில் வடமாகாண கல்விச் செயலாளர் பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளார்.