மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் சமூக நீதிக் கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறைந்த மின்சார அலகுகளை பயன்படுத்தும் வீட்டு மின்சார நுகர்வோர் மீது அதிக சுமையை ஏற்றி புதிய விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தை செலுத்த முடியாதவர்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும் அல்லது அதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமகி ஜனபலவேகவின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எரிசக்தி நெருக்கடியை சமாளிப்பதற்கான தேசிய கொள்கையை வெளியிட வேண்டும் என விஜயதரணி தேசிய பேரவையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே இரத்தின தேரர் தெரிவித்துள்ளார். அதற்கான 16 அம்ச முன்மொழிவை அவர் சமர்ப்பித்துள்ளார். அத்துரலியே இரத்தின தேரர் பரிந்துரைத்த விடயங்களில் கூரைகளில் பத்து இலட்சம் சோலார் பேனல்களை அமைப்பதற்கான அனைத்து வரிகளையும் விலக்கி உடனடியாக சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 1000 மெகாவாட்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.