பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வை.டி..இசுரு குமார இன்று (11) நாடு திரும்பியுள்ளார்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
அவரை வரவேற்கும் முகமாக இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் அறையிலும் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.