அரச கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையின் புதிய நியமனங்கள் அல்லது மாற்றங்களுக்கு முன் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார்.
இதன்படி, அரச கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளை மாற்றுவதற்கு அவசியமானால் நியாயமான காரணங்களுடன் வேட்புமனுக்களை சமர்ப்பித்து உரிய குழுவின் முன் அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முன் உடன்பாடு இன்றி உரிய பதவிகளை மாற்றாமல் இருக்குமாறு ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முறைசாரா நியமனங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.