விநியோக குறைபாடுகள், ஏற்றுதல் தாமதம் மற்றும் எரிபொருள் நிலையங்கள் மூலம் ஆர்டர்களை செலுத்துவதில் தாமதம் போன்ற காரணங்களால் நீண்ட எரிபொருள் வரிசைகள் உருவாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள பதிவிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோகத்தை மீளாய்வு செய்து மேலதிக எரிபொருள் இருப்புக்களை எதிர்வரும் 03 நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அடுத்த இரண்டு நாட்களில் எரிபொருள் வரிசையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.