பாராளுமன்ற உறுப்பினர்களான லசந்த அழகியவன்ன மற்றும் அருந்திக பெர்னாண்டோ ஆகியோரின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 26 மற்றும் 30 வயதுடைய ஊர்பொல மற்றும் லிஹினியாகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
அவர்கள் ஆர்ப்பதுடக்காரர்களில் ஒரு பகுதியாக இருந்ததாகவும், மே 9 ஆம் திகதி சொத்துக்களுக்கு தீ வைத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.