நல்ல முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி, முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் வகையில், ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில், அரச மற்றும் தனியார் துறைகளின் தலைவர்களைக் கொண்ட எட்டு (08) செயலணிகளை நிறுவும் நிகழ்வு இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இந்த செயலணிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
புதிய தொழில் தொடங்குதல், கட்டுமான அனுமதி பெறுதல், வணிகச் சொத்தை பதிவு செய்தல், கடன் பெறுதல், சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாத்தல், எல்லை தாண்டிய வர்த்தகம், வரி செலுத்துதல் போன்ற 8 பகுதிகள், விதிமுறைகள் மற்றும் வணிக நடவடிக்கைகள் தொடர்பான சேவைகளை வழங்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இச்செயற் குலுக்களின் தலைவர்கள் மற்றும் இப்பணியுடன் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 74 உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
மேலும், அவர்களை ஊக்குவித்த ஜனாதிபதியின் செயலாளர் .சமன் ஏக்கநாயக்க, சாதகமான சூழலை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் நீண்டகால முயற்சிகளில் இது மற்றுமொரு மைல்கல்லாகும் எனவும் தெரிவித்தார்.
அரசாங்கம் மாறிய போது அதன் செயற்பாடுகள் அமுல்படுத்தப்படாமை வருத்தமளிக்கும் விடயம் எனவும், அவ்வாறான காலத்திற்கேற்ற மற்றும் அவசியமான நிறுவன சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தாததன் விளைவுகளால் இன்று நாம் அவதிப்பட்டு வருகின்றோம் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.