பிரிட்டனின் புதிய பிரதமர் இன்று அறிவிக்கப்படுவார். பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்ததையடுத்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி புதிய பிரதமரை நியமிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் வெற்றிபெறும் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார்.
கன்சர்வேடிவ் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்களான லீஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சாங்க் ஆகியோர் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த இருவரில் கன்சர்வேட்டிவ் கட்சியின் பெரும்பான்மையை வெல்லும் வேட்பாளர் பிரிட்டனின் அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்தும் வெளியேறிய பிரிட்டன் தற்போது பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. பொருளாதார நெருக்கடி மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி நெருக்கடி ஆகியவை அவற்றில் முக்கியமானவை.
பொருளாதார வீழ்ச்சியால், உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் 5வது இடத்தில் இருந்த பிரிட்டன், தற்போது 6வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.
இந்தியா பிரிட்டனை பின்னுக்கு தள்ளி 5வது இடத்திற்கு வந்துள்ளது. எனவே, பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படுபவருக்கு முன்னால் பல அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் இருக்கும்.
ரஷ்ய மற்றும் உக்ரேனிய நெருக்கடி தற்போது உலக புவிசார் அரசியலில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமர் உக்ரைன் போரை கையாளும் விதம் நாட்டின் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.