அரலகங்வில களஞ்சியசாலையில் 2015ஆம் ஆண்டு நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 4,000 கிலோ நெல் கையிருப்பு முறையான நடைமுறைகள் இன்மையால் அழிவடைந்து வருவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரகவனம் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக சபையின் தலைவர் நீல் டி அல்விஸுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய, அரிசி சந்தைப்படுத்தல் சபையின் தலைவர், அம்பாறை பிராந்திய முகாமையாளருக்கு இன்று இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு அரிசி சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான பழைய அரிசி இருப்புக்கள் அனைத்தையும் கால்நடை தீவனத்திற்காக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அரிசி சந்தைப்படுத்தல் சபை அனைத்து பிராந்திய முகாமையாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்பு, தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் அரலகங்வில களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்படுமாயின் அதற்கு பிராந்திய முகாமையாளர்களே பொறுப்பாவார்கள் எனவும் விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.