பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு செலவிடப்பட்ட தொகை கடந்த வருடங்களில் செலவிட்ட தொகையை விட நான்கு மடங்கு அதிகமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த கூறுகிறார்.
நாவல ஆனந்தா மகளிர் கல்லூரியின் மாணவத் தலைவர்களின் பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.