சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சியின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அவர் செப்டம்பர் 10, 2022 சனிக்கிழமையன்று நாட்டிற்கு வருகைதரவுள்ளார்,
மேலும் சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து அரச அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.