இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்குச் சென்ற அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகத்தில் தனது இரங்கல் குறிப்பை எழுதினார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்திற்கு வருகைதந்து, மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உரிய புத்தகத்தில் குறிப்பொன்றை இட்டுள்ளார்.