உலக வங்கியின் ஆதரவின் கீழ் முன்பள்ளிச் சிறார்களுக்கு மதிய உணவு வழங்கும் நடவடிக்கை இம்மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
35,000 தோட்டப் பிள்ளைகள் உட்பட போசாக்கு குறைபாடுள்ள பிரதேசங்களில் உள்ள 155,000 முன்பள்ளிச் சிறார்களுக்கு மதிய உணவு வழங்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நயகம் எஸ்.பி.கே.டி சில்வா தெரிவித்தார்.
தற்போது 90,000 போசாக்கு குறைபாடுள்ள முன்பள்ளிச் சிறார்களுக்கு காலை உணவும் வழங்குநர்களுக்கு ஒவ்வொரு உணவுக்கும் 30 ரூபாயும் வழங்கப்படுகின்றது.
எனினும், அவ் தொகையானது போதாது என்ற காரணத்தினால் அதனை 60 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரத்தினை வழங்கியிருக்கின்றது.
அதற்கான பணம் உலக வங்கியின் உதவியின் கீழ் வழங்கப்படும்.
இம்மாதம் முதல் இது தொடர்பான காலை உணவிற்கு பதிலாக தற்போதைய செய்முறையை திருத்தியமைத்து மதிய உணவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆரம்பக் குழந்தை அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நயன எஸ்.பி.கே.டி சில்வா மேலும்,தெரிவித்தார்.
இதேவேளை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 2000 ரூபா சத்துணவுப் பொதி மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக 12 வாரங்கள் நிறைவடைந்த தாய்மார்களுக்கு 10 மாதங்களுக்கு தலா ரூ.2,000 மதிப்பிலான சத்துணவு பை வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்தது.