முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வசித்த கொழும்பு பேஜெட் வீதியில் உள்ள வீட்டை அவருக்கு வழங்க அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று நிறைவு செய்துள்ளது.
பிரியந்த ஜயவர்தன, காமினி அமரசேகர மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் முன்னிலையில் இந்த மனுவிற்க்கான விசாரணை நடைபெற்றது.
அங்கு, மனுதாரர் மற்றும் பிரதிவாதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது முடிவை அறிவிப்பதை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.
மாற்றுக் கொள்கை மையம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் டாக்டர் பாக்யசோதி சரவணமுத்து ஆகியோர் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வசித்த கொழும்பு பேஜெட் வீதியிலுள்ள அவரது இல்லத்தை அவர் ஓய்வு பெற்ற பின்னரும் வழங்குவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என மனுதாரர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வீடு மாற்றுவது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மனுதாரர்கள் கூறியதுடன், அந்தச் சட்டத்தின் மூலம் குடிமக்களின் அடிப்படை மனித உரிமைகளை முன்னாள் ஜனாதிபதி மீறியுள்ளார் என்றும் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.