குறித்த வருடத்திற்குள் பாடசாலை பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது குறித்து தற்போது ஆய்வு செய்து வருவதாக கல்வி செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ஒளிபரப்பான பிறமொழி ஊடகதின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், குறிப்பிட்ட வருடத்திற்குள் பாடசாலை பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் எதிர்காலத்தில் புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.
புதிய கல்வி சீர்திருத்தத்தின் ஊடாக இது தொடர்பான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி செயலாளர் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டார்.