நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து விசேட அறிக்கையொன்றை விடுத்து பாதுகாப்பு படைகளின் பிரதானி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தற்போதுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் ஆயுதப்படையினரும் பொலிஸாரும் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி, அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதைத் தவிர்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதியின் இராஜினாமா இன்று இடம்பெறும் என சபாநாயகர் தனக்கும் இராணுவ தளபதிகளுக்கும் உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஜனாதிபதி நியமிக்கப்படும் வரையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சபாநாயகரிடம் தெளிவுபடுத்துமாறும் முப்படைத் தளபதிகளுக்கும் அறிவிக்குமாறும் முப்படைத் தளபதிகளும் பொலிஸ் மா அதிபரும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைவர் மற்றும் கட்சித் தலைவர்களினால் இன்று மாலை நாட்டு மக்களுக்கு தீர்மானங்கள் அறிவிக்கப்படும் என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.