பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய தேசிய பட்டியல் உறுப்பினர்கள் வெளியேற வேண்டும் எனவும் அவ்வாறு வெளியேறும் இடத்திற்கு நான்கு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன உள்ளிட்ட குழுவினர் இந்த யோசனையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இது தொடர்பில் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது.
உவிந்து விஜேவீர மற்றும் போராட்டத்தை முன்னெடுத்த மூன்று இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு வெற்றிகரமான பதில் கிடைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.