முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எஸ். எம்.நிஷார் மெளலானா என்ற நபரே இன்று (31) முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளார்.
ஜப்பானின் Taisei நிறுவனத்திடம் 200 மில்லியன் ரூபா இலஞ்சம் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா மீது இம்முறைப்பாட்டை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.