(ஏ.சீ.றியாஸ்)
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தத்துவவியல் கலாநிதி ஏ.எல்.எம். றியால் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவருக்கான பதவி உயர்வுக் கடிதத்தினை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் இன்று (07) தனது காரியாலயத்தில் வைத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் கலை, கலாசார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.