எரிபொருள் நெருக்கடி மற்றும் நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக அடுத்த வாரம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.
கல்வி அமைச்சில் நடைபெறும் இந்த கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் இந்த வாரம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.