இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் அல்லது பிற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அங்கு கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு உதவி தேவைப்படும் போது தலையிடும் வகையில் இந்தப் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகின்றது.
இதற்காக புதுடெல்லி உயர் ஸ்தானிகராலயம், மும்பை துணை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சென்னை தூதரகத்தின் மூலம் இலவச இணைய வசதிகள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி, மாணவர்கள் தாங்கள் படிக்கும் மாநிலத்திற்கு ஏற்ப விவரங்களை தாங்களாகவே உள்ளிட வேண்டும்.
இதற்குப் பதிவு செய்ய நீங்கள் https://www.slhcindia.org/ மற்றும் https://www.sldhcchennai.org/ ஐப் பார்வையிடலாம்.