ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த ஜனாதிபதியை பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன வரவேற்றார்.
அங்கு பாதுகாப்பு படை தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் முதன்முறையாக அரச நிறுவனமொன்றுக்கு விஜயம் செய்த சந்தர்ப்பம் இதுவாகும்.