நேற்றிரவு 09 வரை தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 92,845 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 23,64,434 ஆகும். 23,022 முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
QR குறியீட்டின் கீழ் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இருந்து எரிபொருள் விநியோகம் தீவு முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இப்போதும் கூட சில நிரப்பு நிலையங்கள் QR குறியீட்டின் கீழ் வெற்றிகரமாக எரிபொருளை வழங்குகின்றன.