நிலுவைத் தொகையை செலுத்தாத வாடிக்கையாளர்களின் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன் பிரதிப் பொது முகாமையாளர் வர்த்தகப் பிரிவு முகாமையாளர் பியல் பத்மநாத, வானொலி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்சொன்னது போன்று உரையாற்றினார் பெரும்பாலான வீட்டு நீர் பாவனையாளர்கள் இவ்வாறான நிலுவைகளை செலுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நிலுவைத் தொகையை செலுத்தாத அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் தங்கியுள்ள குடியிருப்புகளுக்கான நீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத மேலும் தெரிவித்தார்.