வனஜீவராசிகள் திணைக்களத்தின் கடமைகளுக்கு வேறு அரச நிறுவனங்களின் ஊழியர்களை ஈடுபடுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் யானை – மனித மோதலை கட்டுப்படுத்த வனவிலங்கு உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் மேலும் பல பிரச்சனைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கிடைக்கக்கூடிய குறைந்த வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தி காட்டு யானைகளை கிராமங்களில் இருந்து விரட்டுமாறு வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.