சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, IMF ஊழியர்களும் இலங்கை அரசாங்க அதிகாரிகளும் சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியுடன் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கான ஊழியர்கள் மட்ட உடன்பாட்டை எட்டியதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
இது இலங்கைக்கு ஒரு முக்கியமான முன்னேற்றம் என அவர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், செயற்குழு மட்ட இணக்கப்பாடு ஒன்று அண்மையில் எட்டப்பட்டது.
48 மாத வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை நீட்டிக்கப்பட்ட கடன் வசதியை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.