உள்ளூராட்சி மன்றங்கள் வசூலிக்கும் வரிப்பணத்தை அந்த பிரதேசங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அதே நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு நகர மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
நிதி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையினால் உள்ளூராட்சி மன்றங்கள் தமது வரிப்பணத்தில் தமது பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், பல உள்ளூராட்சி மன்றங்கள் தன்னிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், அந்த கோரிக்கைகளுக்கு அமைய இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இறுதி கட்டத்தில் உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை முடிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் துரித கதியில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதக்கவும் அமைச்சர் மேலும், தெரிவித்தார் .
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், எனினும் கூடிய விரைவில் அந்த திட்டங்களை மீள ஆரம்பிக்க அரசாங்கம் நம்புவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.